சாலையோரம் உள்ள பாழடைந்த கிணறு

Update: 2025-06-08 09:42 GMT

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் ஆயிப்பட்டி அருகே சாலையோரம் தடுப்புச்சுவர் இன்றி காணப்படும் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு சாலையின் அருகே உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த கிணற்றில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் அருகே உள்ள பாழடைந்த கிணற்றை மூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்