வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-06-08 08:51 GMT

வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட உரப்பனவிளையில் இருந்து சரல் ஊருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், தற்போது பெய்த மழையில் தண்ணீர் வடிந்தோடாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையோரத்தில் வடிகால் வசதி ஏற்படுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்