மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலக பகுதியில் பயணிகள் நிழற்குடை எதுவும் இல்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மழை, வெயிலில் திறந்தவெளியில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. அதுவும், குழந்தைகளுடன் வரும் பயணிகள் அமர கூட இடம் இன்றி கடும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.