ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படுமா?

Update: 2025-06-01 19:50 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காவலர் குடியிருப்பில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலை, ராசிபுரத்திலிருந்து ஆட்டையாம்பட்டி செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் இருபுறங்களும் சாலையோர கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி விபத்து இல்லா பயணத்தை கொண்டு வர வேண்டும். மேலும் அந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

-சுப்பிரமணியம், வெள்ளைபிள்ளையார் கோவில்.

மேலும் செய்திகள்