தமிழகத்தில் கம்பத்தில் இருந்து கேரள மாநில கம்பம்மெட்டு பகுதிக்கு செல்லும் மலைப்பாதையில் குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளது. இதனால் மலைப்பாதையில் வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.