சேதமடைந்த கால்நடை மருத்துவமனை

Update: 2025-06-01 16:16 GMT
பிரம்மதேசம் அடுத்த முருக்கேரி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் உள்ளது. இம்மருத்துவமனையின் தரைப்பகுதிகள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டுவரும் கிராம மக்கள் அவதி அடைகின்றனர். எனவே தரைப்பகுதியை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்