பரங்கிப்பேட்டை அருகே பூவாலை அரசு உயர்நிலைப்பள்ளி நுழைவு வாயிலில் கதவு அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் சமூக விரோதிகள் இரவு வேளைகளில் பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தனர். இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளியின் நுழைவு வாயிலில் இரும்பு கதவு அமைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.