கீரப்பாளையம் ஒன்றியம் டி.நெடுஞ்சேரி உடையார் தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.