பன்றிகளால் சுகாதார சீர்கேடு

Update: 2025-06-01 14:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் அருகாமையில் உள்ள நகரங்களில் பன்றிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் அங்கு வளர்க்கப்பட்ட பன்றிகள் கந்தர்வகோட்டையில் கொண்டு வந்து விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பன்றிகள் குடிசை பகுதியில் வாழ்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்கள் சமைத்து வைத்திருக்கின்ற உணவு பொருட்களை சேதப்படுத்தி தின்று விடுகிறது. மேலும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்