கோவில்பட்டி- கடலையூர் ரோடு ஸ்டேட் வங்கி காலனி முச்சந்தி பகுதியில் வாறுகாலுக்கு மூடி இல்லாமல் திறந்தவெளியில் உள்ளது. எனவே அங்குள்ள கடைக்காரர்கள் வாறுகாலுக்கு தடுப்பு அமைத்துள்ளனர். தடுப்பு இல்லாததால் இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் வாறுகாலில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.