பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் எசனை ஏரிக்கரை பகுதியில் சிலர் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரிக்கரை பகுதியில் கழிவுகளை கொட்டுவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.