பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிக அளவில் உள்ளது. இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் கடிப்பதற்காக தெருநாய்கள் துரத்துகின்றன. இதனால் பலர் பயந்து தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.