சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை போலீஸ் குடியிருப்பு காலனி மேற்கு பழைய போலீஸ் குடியிருப்பில் உள்ள வீடுகள் பராமரிப்பின்றி கிடக்கிறது. மேலும் குடியிருப்பு வளாகத்தில் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் விஷபூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.