மணவாளக்குறிச்சி அருகே தருவை பகுதி உள்ளது. இந்த பகுதியில் குளச்சல்- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக வேகமாக வாகனங்கள் செல்லும் போது சாலையோர கடைகளுக்குள் சகதியுடன் மழைநீர் தெறிப்பதால் வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் தேங்கும் மழைநீர் வடிந்தோட வடிகால் ஓடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருமைதங்கம், தருவை.