‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2025-06-01 07:38 GMT

டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி அம்மன் கோவில் வீதி நூலகம் அருகே ரோட்டோரம் தெருவிளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது புதிதாக தெருவிளக்கு பொருத்தப்பட்டு தற்போது எரிகிறது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்