விழுப்புரம் அடுத்த சித்தேரிக்கரை வார்டு 3-ல் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகனஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழும் நிலை உருவாகியுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.