நாமகிரிப்பேட்டை நகர பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதாரத்துறையினர் தண்ணீர் தேங்கி நிற்கும் குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு கொசு ஒழிப்பு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தர்மன், நாமகிரிப்பேட்டை.