விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகர் மெயின் ரோட்டில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பழுதடைந்து பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?