போக்குவரத்து நெரிசல்

Update: 2025-05-25 10:32 GMT

கோவையை அடுத்த விளாங்குறிச்சி சேரன் மாநகரில் புதன்கிழமைதோறும் வியாபாரிகள் சிலர் சாலையில் அமர்ந்தும், வாகனங்களை நிறுத்தியும் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்