சேத்தியாத்தோப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஆரம்ப சுகாதார நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.