விபத்து ஏற்படுத்தும் தெருநாய்கள்

Update: 2025-05-18 09:41 GMT

கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு ரெட்டிபாளையம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு, இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சிறுவர் -சிறுமிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்