குரங்குகள் தொல்லை

Update: 2025-05-18 09:40 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பூவரசகுடி, வம்பன் 4 ரோடு, வல்லத்ரா கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து மளிகை பொருட்கள், தின்பண்டங்களை எடுத்துச் சென்று விடுகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள சிறுவர்- சிறுமிகள் மற்றும் பெண்களை குரங்குகள் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்