கம்பம் அருகே கம்பம்- ஏகலூத்து சாலை வழியாக செல்லும் ஓடையில் தனி நபர்கள் மரக் கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் ஏகலூத்து சாலை வழியாக செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.