நிலக்கோட்டை அருகே பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. மேலும் சுகாதார வளாக கட்டிடமும் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.