தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்

Update: 2025-05-11 16:37 GMT

கரூர் மாவட்டம், அருகே உள்ள அம்மன் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரி வாய்க்கால் அமைக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தோற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்