விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் விலக்கு, ரெயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதம் அடைந்த நிலையில் உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் இங்கு வரும் பயணிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும்.