விழுப்புரம் அருகே செம்மேடு கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு பொதுமக்களுக்கு டெங்கு, காலரா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.