பூட்டி கிடக்கும் ஏ.டி.எம். மையம்

Update: 2025-05-04 17:16 GMT

போடி தலைமை தபால் அலுவலகம் அருகில் தபால் நிலையம் சார்பில் ஏ.டி.எம். மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் இந்த ஏ.டி.எம். மையத்தை பயன்படுத்தி தான் பணம் எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த ஏ.டி.எம். மையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஏ.டி.எம். மையத்தை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்