கம்பத்தில் உள்ள உத்தமுத்து கால்வாய் உத்தமபாளையம் வரை செல்கிறது. இந்த கால்வாயின் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தற்போது நடக்கிறது. ஆனால் கால்வாயின் கிழக்கு பகுதியில் உள்ள கரைகள் மட்டுமே பலப்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கு பகுதி கரைகள் பலப்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. எனவே மேற்கு பகுதியில் உள்ள கரைகளையும் பலப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.