கம்பம் பழைய தபால் நிலையம் பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து அந்த பகுதியில் மீண்டும் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் அதில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.