விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ரிசர்வ் லைன் பகுதியில் சப்-கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் உள்ளே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.