சென்னை அடையாறு, காந்திநகர் மெயின் ரோட்டில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு வழிச் சாலையாக அறிவிக்கப்பட்டது. இதை குறிப்பிடும் அடையாள பலகை ஒருபுறம் மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த சாலையை இரு வழிசாலையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்த சாலையின் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.