சென்னை காந்திநகர், கெனால் பேங்க் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் செயின்ட் பேட்ரிக் கல்லூரியில் இருந்து புற்றுநோய் ஆஸ்பத்திரி வரை உள்ள நடைபாதையில் சிலர் தங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.