சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடு பகுதியில் குப்பைகள் அதிகமாக கொட்டப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை குப்பைகளை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.