நொய்யல் அருகே முத்தனூரில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செல்வநகர் சுற்று வட்டார பகுதிகளில் இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக சுடுகாடு அமைக்கப்பட்டது. இந்த சுடுகாடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக அங்கு பல்வேறு வகையான கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிமித்துள்ளது. இதனால் இறந்தவர்களை உடனடியாக எரிக்க கடும் சிரமப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.