கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக சுற்றுலா வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் குரங்குகளுக்கு உணவு கொடுப்பதாக நினைத்து உணவு பொருட்களை சாலையில் வீசி செல்கின்றனர். ஆனால் அவற்றை எடுத்து சாப்பிட வரும் குரங்குகள் மீது அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் உணவு பொருட்களை வீசிச்செல்பவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.