பராமரிப்பு இல்லாமல் இருக்கும் சங்கு ஊதும் மேடை

Update: 2025-04-13 10:13 GMT
அறந்தாங்கி சுற்று வட்டார பகுதி மக்கள் மணி நேரத்்தை அறிந்து கொள்ளும் வகையில், அறந்தாங்கி வ.உ.சி திடலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு சங்கு ஊதும் மேடை அமைக்கப்பட்டது. இந்த சங்கு தினசரி காலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி, இரவு 8 மணி என 4 முறை ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்ததால் அறந்தாங்கி நகரம் மட்டுமல்லாது அழியாநிலை, மூக்குடி, இடையார், கூத்தாடி வயல், ஆளப்பிறந்தான், பாக்குடி, ஆலங்குடி மேலட்பட்டு, பள்ளத்திவயல், புதுவாக்கோட்டை, பஞ்சாத்தி, ஊர்வணிஉள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் சங்கொலி கேட்டது. இந்த சங்கினை ஒலியை வைத்து தான் நகர மக்கள் சுற்று வட்டார கிராம மக்கள் நேரத்தை அறிந்து வந்தனர். தற்போது சங்கு ஊதும் மேடை முறையாக பராமரிக்கததால் செடி, கொடிகள் வளர்ந்து அந்த அறை புதர் மண்டி கிடைக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சங்கு ஊதும் அறை சுத்தம் செய்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்