மயிலம் அருகே கணபதிபட்டு கிராமத்தில் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படும் குப்பை வண்டி பயன்படுத்தப்படாமல் பழுதாகி ஒரே இடத்தில் நிற்கிறது. இதனால் அந்த வண்டி மட்கி வீணாகும் அவல நிலை உருவாகியுள்ளது. எனவே காட்சிபொருளாக நிற்கும் குப்பை வண்டியை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.