தெருநாய்கள் தொல்லை

Update: 2025-03-30 16:42 GMT

குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இருசக்கர வாகனங்களில், நடந்து செல்வோரை கூட்டமாக சேர்ந்து தெருநாய்கள் கடிக்க துரத்துகின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமரன், குமாரபாளையம்.

மேலும் செய்திகள்