சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சரியான தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.