தேனியில் இயக்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் காற்று ஒலிப்பான் (ஏர் ஹாரன்) மூலம் அதிக ஒலி எழுப்பியபடி சாலைகளில் செல்கின்றன. இதனால் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள், பெண்கள், முதியோர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவியை பறிமுதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.