சென்னை திருமுல்லைவாயில், பச்சையம்மன் கோவில் அருகில் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேர பணி முடிந்து வருபவர்கள் மற்றும் கோவிலுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். குறிப்பாக, அந்த பகுதி வழியாக வருபவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.