ஈரோடு ரெயில்நிலையத்தில் தெருநாய்கள் ஏராளமான சுற்றித்திரிந்து வருகின்றன. ஒன்றுக்கொண்டு சண்டையிட்டபடியும், குரைத்தபடியும் தொல்லை கொடுக்கின்றன. இதனால் ரெயில் ஏற வரும் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமை நடக்கும் ஜவுளிச்சந்தைக்கு வந்து செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே ரெயில் நிலையத்தில் தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.