பஸ் வசதி வேண்டும்

Update: 2025-03-16 14:30 GMT

சென்னையை அடுத்த வேளச்சேரியில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆனால் வேளச்சேரியில் இருந்து கிண்டி, நந்தம்பாக்கம், ராமாபுரம் வழியாக பூந்தமல்லிக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் ஒரு சிலர் பணி முடிந்த பின்னர் கிண்டி சென்று அங்கிருந்து பூந்தமல்லிக்கு பஸ் மாறி சென்று வருகின்றனர். எனவே, பணி முடிந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பயணிகளின் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்