சென்னை ஓட்டேரி, கொன்னூர் நெடுஞ்சாலை டேங்க் பண்ட் சாலை அருகே மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் குறுகலாகி விட்டதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. மேலும், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள், இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து போலீசார் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.