நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2025-03-16 09:43 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகளுக்கு என இந்த பஸ் நிலையத்தில் இலவச பொது சுகாதார வளாகம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் ஆங்காங்கே பொது இடங்களில் இயற்கை உபாதைகள் கழித்து அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் நோய் தோற்றுப் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அறந்தாங்கி பஸ் நிலையத்தில் பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்