விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் சாலையில் உள்ள குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் சிரமமடைகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதியில் உள்ள நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.