சங்கராபுரம் அருகே அத்தியூர் சந்தைமேடு மும்முனை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பெயர்பலகை வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் அதை மரக்கிளைகள் மறைத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.