கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி கவுண்டன்புதூர் பகுதியில் இருந்து முத்தனூர் புகழூர் வாய்க்கால் வரை உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் கால்வாய் வழியாக கவுண்டன்புதூர், செல்வநகர், முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விவசாய தோட்டங்களில் தண்ணீர் பாய்ந்து வெளியேறும் இந்த உபரி நீர் கால்வாய் வழியாக சென்று அங்குள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி அந்த குளத்தில் இருந்து புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. இந்நிலையில் குளம் தூர்வாரப்படாததால் குளத்தில் பல்வேறு வகையான செடி- கொடிகள், சம்புகள் சுமார் 5 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ளன. இதன் காரணமாக குளத்தில் அதிக அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.