கோவை சித்தாபுதூர் புதியவர் நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சாலைகளில் உலா வருகின்றன. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி செல்கின்றன. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். அத்துடன் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.